என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

நாடகங்கள்
 
சூரியனின் அறுபட்ட சிறகுகள்
சூரியனை ஒரு மையப் படிம மாக கொண்ட இந்த நாடகம் இரவே இல்லாத உலகைப் பற்றிப் பேசுகிறது. நாடக வெளியில் வெளியான இந்த நாடகத்தை புதுவைப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த நாடகத் துறை மாணவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள்.
 
உருளும் பாறைகள்
தேசிய நாடக விழாவிற்கான தென்மண்டல தேர்வு பெற்ற இந்த நாடகம் மதுரை சுதேசிகள் குழுவினரால் மேடை ஏற்றப் பட்டது. சிசிஃபஸ் என்ற புராணிக கதா பாத்திரத்தின் மறு வடிவம் போன்ற ஒரு மனிதனின் தேடுதலே இந்த நாடகம். இயற்கைக்கும் மனித முயற்சிகளுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் நாடகத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.
 
உதிர்காலம்
நினைவுகளின் வழியே வாழ்வை மீள் உருவாக்கம் செய்யும் இந்த நாடகம் நாடக வெளியில் வெளியானது. மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் நிகழ்த்தப் பட்டது. கேரள நாடக விழாவிலும் இந்நாடகம் மலையாளத்தில் நிகழ்த்தப் பட்டுள்ளது.
 
அரவான்
மகாபாரதத்தின் களப்பலியான அரவான் கதாபாத்திரத்தை புதிய கண்ணோட்டத்தில் விவரிக்கும் இந்த நாடகம் மூன்றாம் அரங்கு நாடக குழுவினரால் நிகழ்த்தப் பட்டது. ஒரு நபர் நடிக்கும் இந் நாடகம் அதன் கவித்துவமான மொழி மற்றும் படிமங்களால் மிகுந்த கவனம் பெற்றது. கருணா பிரசாத் இதை இயக்கி நடித்திருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட முறை இந் நாடகம் மேடை ஏற்றப் பட்டுள்ளது. அரவான் நாடகப் பிரதி தமிழக அரசின் 2006 ஆம் ஆண்டின்  சிறந்த நாடக நூலாகப் பரிசு பெற்றுள்ளது.
 
நதி அறியாதது
பெண்ணிய விடுதலையை முன் வைக்கும் தனி நபர் நாடகமான நதி அறியாதது, இயற்கையின் மீதான நமது வன்முறையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஜெயராவ் இயக்கத்தில் இந் நாடகம் அலையன்ஸ் ஃபிரான்சில் நிகழ்த்தப் பட்டது.
 
மரண வீட்டின் குறிப்புகள்
தஸ்தாவெஸ்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இந்த நாடகத்தை முருக பூபதி இயக்கி நடித்திருக்கிறார். செவ்வியல் தன்மையும் கனவு தோற்றங்களும் இணைந்த பரிசோதனை நாடகம் இது.
 
தஸ்தாவெஸ்கியின் சங்கீதம்
தஸ்தாவெஸ்கியின் வாழ்வில் நடைபெற்ற காதல் சம்பவத்தை விவரிக்கும் இந் நாடகம் உயிர்மை இதழில் வெளியானது. நாடகப் பிரதி வாசித்தலாக ஐந்துக்கும் மேற்பட்ட முறை நிகழ்த்தப் பட்டுள்ளது.
 
உற்று நோக்குதல்
பெரு நகரங்களில் காதல் எந்த அளவு மலினமாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது என கேலியோடு விவரிக்கும் இந்த நாடகம் தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற சண்முக ராஜாவால் தயாரிக்கப் பட்டு வருகிறது.
 
உருப்பளிங்கு
நினைவுகளின் வழியே நிலவெளியின் கதையைக் கூறும் இந்த நாடகம் மதுரை சுதேசிகள் நாடகக் குழுவிற்காக எழுதப்பட்டது. கவித்துவமான படிமங்களும் தனிமொழியும் இதன் சிறப்புகள்.

இந்த நாடகங்களை நிகழ்த்த  விரும்புகிறவர்கள் பிரதிக்காக என்னைத் தொடர்பு கொள்ளலாம்